Sep 22, 2010

இந்தப் பகல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!....


இந்தப் பகல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!
திரைப்படத் தொழில் நசிந்துவிட்டது, திருட்டு டிவிடி பெருகிவிட்டது என்றெல்லாம் சினிமாக்காரர்கள் ஒருபக்கம் கூவுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணமான திரையரங்குகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்றால் மட்டும் ஒருவரும் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
ஒரு படம் குறித்த இமேஜை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைப்பதில் முக்கியப் பங்கு திரையரங்குகளுக்கே உண்டு. பெரிய படங்கள் வெளியாகும்போது ரசிகர்களைக் கட்டுப் படுத்துகிறோம் என்ற பெயரில் பெரிய கம்பெடுத்துக் கொண்டு தாறுமாறாக அடிக்கும் திரையரங்க ஊழியர்களை போலீசார் உள்பட யாருமே கண்டு கொள்வதில்லை.
முக்கிய படங்களுக்கு கவுண்டரிலேயே எக்கச்சக்க விலைக்கு டிக்கெட்டுகளை விற்பது, அல்லது சைக்கிள் ஸ்டாண்ட் பையன்களிடம் மொத்த டிக்கெட்டையும் கொடுத்து கறுப்பு விலைக்கு விற்க வைப்பது போன்றவை இன்றும் தொடர்கின்றன. அரசு இதைக் கண்டு கொள்வதே இல்லை.
நியாயமான கட்டணம், திரையரங்குகளில் திண்பண்டங்களை நியாயமான விலைக்கு விற்பது, சுத்தமாக பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினாலே போதும்… திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவது அதிகரிக்கும்.
திரையரங்குக்குப் போய் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவம் என்ற நிலை அடியோடு மாறிப் போனதுதான் இன்றைய திரைப்படத் தொழில் நசிந்து போனதற்கு முக்கிய காரணம்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள திரையரங்குகளைக் கண்காணித்து, தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பஞ்சாயத்து அலுவலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அரசு மக்கள் தொடர்பாளர்களுக்கே உள்ளது. ஆனால் அவர்கள் முற்றாக லஞ்சத்தில் மூழ்கித் திளைப்பதால், என்ன அக்கிரமம் நடந்தாலும் கேட்பாரற்ற நிலை நிலவுகிறது.
தற்போது, இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க மாநில மனித உரிமை ஆணையத்திடமிருந்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது.
இதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத் தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது.
பல லட்சம் சினிமா ரசிகர்களின் உள்ளக் கிடக்கையையே மனித உரிமை ஆணையம் உத்தரவாகப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை மாநில அரசு அலட்சியப்படுத்திவிடக் கூடாது… அலட்சியப்படுத்தவும் முடியாது என்பது ஆறுதலளிக்கும் சமாச்சாரம். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மாநில அரசு.
அன்புடன்
உங்கள்
மாறன்......

3 comments:

bandhu said...

Honestly, i love this sad state of affairs in cinema in tamil nadu. This is the only way, we will come out of the undue importance we all give to cinema in our lives! I am looking forward to the days when cinema will be treated as just one more recreational avenue and not any more!

ப.கந்தசாமி said...

எனக்கு காசு வந்தாப் போதும். எவனோ எங்கயோ அடிச்சுக்கிட்டு சாகுங்க, எனக்கென்ன?

Anonymous said...

It's very effortless to find out any matter on web as
compared to textbooks, as I found this post at this site.


Here is my web site :: free music downloads (http://freemusicdownloadsb.com)

Post a Comment

மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

கருத்து சொன்னவர்கள் (Recently):