May 26, 2010

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்....

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

1. Cain And Abel:-
இது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

2. John the ripper:-
இது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.
ftp://ftp.ox.ac.uk/pub/wordlists
http://www.outpost9.com/files/WordLists.html
ftp://ftp.mirrorgeek.com/openwall/wordlists

இந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.

3. THC Hydra:-
இது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.
http://freeworld.thc.org/thc-hydra/hydra_pass.jpg


4. Air Crack:-
இது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.
http://wirelessdefence.org/Contents/Images/aircrack_win1.PNG

5. l0pht crack:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.
6. Airsnort:-
இதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.

7. Solar Winds:-
SNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.


8. PwDump:-
இது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.

9. Rainbow Crack:-
இது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.

10. Brutus:-
இதுவும் ஒரு Remote Password cracking Tool ஆகும். இது HTTP, POP3, FTP, SMB, TELNET, IMAP, NTP ஆகிய Protocol-களை மட்டும் support பண்ணுகிறது. இதனை இங்கு பெறலாம்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

May 24, 2010

Trial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...

இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.


நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும்,
பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.

அன்புடன்
உங்கள்
மாறன்...

May 16, 2010

மரங்களின் தேசம்... மலர்களின் வாசம் - சிங்கப்பூர்

சிங்கப்பூர் 'சென்ட்' அடித்தால் ஊரே மணக்கும் என்பர்; சிங்கப்பூருக்குப் போனால் நாடே மணக்கிறது. சுத்தம், சுகாதாரம், சுகந்தம், பசுமை, தொலைநோக்கு, தொழில் நுட்பம், பிரம்மாண்டம், உழைப்பு, உல்லாசம், உற்சாகம்...இவை தான் சிங்கப்பூரின் நிரந்தர அடையாளங்கள்.


சிங்கப்பூரின் மொத்தப்பரப்பே 710 சதுர கி.மீ.,தான். மலேசியாவிலிருந்து பிரிந்து குட்டித் தீவாக நிற்கும் சிங்கப்பூரை, 'மைக்ரோ ஸ்டேட்' என்றும், 'அல்ஃபா வேல்டு சிட்டி' என்றும் வர்ணிக்கின்றனர். இந்த குட்டி நாடு தான், உலகின் வளமான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.சிங்கப்பூரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு 45 நிமிட பயணத்தில் போய் விடலாம். நாட்டின் மொத்த மக்கள் தொகையே 49 லட்சம் மட்டுமே. இவர்களிலும், 36 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். சர்வீஸ் செக்டார் எனப்படும் பொதுப்பணிகளில் இவர்களின் பங்களிப்பு மொத்தம் 50 சதவீதம்.சிறிய நாடு, மிகக்குறைந்த மக்கள் தொகை, அதனால் தான் நல்ல முறையில் பராமரிக்க முடிகிறது என்று நம்மவர்கள் விவாதம் செய்யலாம். உண்மையில், உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த நாடுகளில், சிங்கப்பூரும் ஒன்று. விண்ணை முட்டும் முன்னேற்றத்துக்குக் காரணம், நாட்டை முன்னேற்றுவதில் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையும், அதற்கு மக்கள் தரும் அதீத ஒத்துழைப்பும் தான்.


சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் எல்லாம் சேர்ந்து வாழும் சொர்க்கபூமி சிங்கப்பூர். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், 'நான் ஒரு சிங்கப்பூரியன்' என்று சொல்வதைத்தான் அவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். 20 வயது இளைஞன் முதல் 70 வயது பெரியவர் வரை, யாரிடம் பேசினாலும் அந்த தேசத்தின் மீது அவர்கள் வைத்திருக்கிற தீவிரப் பற்று வெளிப்படுகிறது.உணவு, தண்ணீர் உட்பட எல்லாவற்றுக்கும் மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளை நம்பி இருக்கும் அந்த குட்டி தேசம் தான், உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறி, டாலர்களில் வருவாயை வாரிக்கொட்டுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் பொருளையும் வாங்கி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது.பல நாட்டு மக்களையும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாக வரவழைக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகள், அழகானவை மட்டுமில்லை; அசாத்தியமானவை.


சிங்கப்பூரில் நம் வசதிக்கேற்ப, சுற்றிப்பார்க்க பல விதமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. ஒரு இடத்துக்கும் போகாமல், ஊரைச் சுற்றி நான்கு முறை வலம் வந்தாலே, ஓராயிரம் விஷயங்கள் நமக்கு புலப்படும். முதலில் நம் மூளைக்குள் மின்னலாய்ப் பதிவது, இது 'மரங்களின் தேசம்' என்பது தான்.சிங்கப்பூரில் நாம் முதலில் பாதம் பதிக்கும் 'ஷங்கி' சர்வதேச விமான நிலையமே, ஓர் அழகிய தாவரவியல் பூங்கா போலத்தான் இருக்கிறது. சென்னை தவிர்த்து, தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பொதுவான அடையாளம், மொட்டை வெயிலும், நெட்டைச்சுவர்களும்தான்.கோவையில் விமான நிலைய ரோட்டில் மட்டும் தான், கொஞ்சம் மரங்கள் மிச்சம் இருந்தன. அதையும் வெட்டி, சாலையை விரிவாக்கம் செய்து விட்டனர். கேட் டால், 'செம்மொழி மாநாட் டுக்கு' என்கிறார்கள். மரங் களை அழிப்பதா செம்மொழிக்குச் செய்யும் மரியாதை?


பசுமையே சுமையாய்!: ஷாங்கி விமான நிலையத்திலிருந்து வெளியே பயணத்தைத் துவக்கினால், எங்கே திரும்பினாலும் மரங்கள், செடி, கொடிகள், புல்வெளி... சுருக்கமாய்ச் சொன்னால் பசுமை. பல அடுக்கு மாடிக் கட்டடங்களுடன் பல கோடி மரங்களின் பசுமையையும் சுமையாகத் தாங்கி நிற்கிறது சிங்கப்பூர்.ஏற்கனவே, மொத்தப்பரப்பில் 23 சதவீதம் மழைக்காடுகளைக் கொண்டிருக்கிறது அந்த சின்ன தேசம். இயற்கை சமன்நிலைக்கு ஒரு தேசத்தின் பரப்பில், 33 சதவீதம் வனமாக இருக்க வேண்டுமென்கிறது யுனெஸ்கோ. அந்த இலக்கை எட்ட, 2002ல் 'சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012' என்ற திட்டத்தை துவக்கியது அந்நாட்டு அரசு.தனியார், பொதுமக்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பங்களிப்புடன், (3பி-பீப்பிள்-பிரைவேட் அண்ட் பப்ளிக் செக்டார்ஸ்) இதற்கான பசுமைப் பணிகளைத் துவக்கி, அதில் பெருமளவு வெற்றியையும் கண்டு விட்டது. மார்ச் 2009 வரை, 100 கி.மீ., தூரத்துக்கு இரு புறமும் பசுமைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 2030க்குள் 360 கி.மீ., தூரத்துக்கு, அதாவது 2,225 ஏக்கர் பரப்பை பசுமைப் பிரதேசமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இதற்காகவே, தேசிய உயிர்க்கோள ஆய்வு மைய த்தை அமைத்து, இந்த பணிகளை வழி நடத்தி வருகிறது அந்த அரசு.இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, பல லட்சங்கள் இருக்கும். பதிலுக்கு நடப்பட்ட மரக்கன்றுகள், சில ஆயிரம் இருப்பது கூட சந்தேகமே. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, மரம் வெட்டும் துறையாகவே மாறி விட்டது. ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக 10 மரக்கன்று நட வேண்டுமென்று ஐகோர்ட் கூறியுள்ள கருத்து, வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. 'குளுகுளு' நகரான கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 5,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன; பதிலாக 100 மரக்கன்றுகள் கூட வைக்கப்படவில்லை.


ஆனால், சிங்கப்பூரில் மிக அவசியமாக ஒரு மரத்தை வெட்ட வேண்டிய நிலை இருந்தாலும், கிளைகளை மட்டும் நறுக்கி  விட்டு, மரத்தை வேரோடு தோண்டி எடுத்து, அப்படியே வேறு இடத்துக்கு 'டிரெயிலர்' மூலமாகக் கொண்டு சென்று, மீண்டும் நட்டு, அதற்கு உயிர் கொடுத்து விடுகின்றனர்.சமீபத்தில், 'ஆர்ச்சடு' என்ற பகுதியில் இதேபோல ஒரு மரத்தின் கிளைகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இந்த உண்மை தெரிந்தது. அங்கே, சாலையோரம் வைக்கின்ற மரங்களும், சூழலுக்கு உகந்த மரங்களாகவே உள்ளன. அவை பெரிதாக இடத்தையும் அடைப்பதில்லை. வானுயர கட்டடம் கட்டினாலும், அதற்கு அருகில் இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டுமென்கிறது அந்நாட்டின் விதி. சாலை விரிவாக்கம், புதிய கட்டடம் என்றாலே, முதல் வேலையாக அங்கிருக்கும் பச்சை மரங்களை வெட்டுவதே நம் தேசத்தில் எழுதப்படாத விதி.


மாதம் மும்மாரி மழை: திரும்பிய திசையெல்லாம் பசுமை இருப்பதால்தான், அங்கே கொளுத்தும் வெயில் காலத்திலும் மாதம் 3 முறையாவது மழை தட்டி எடுக்கிறது. நம்மூரைப் போலவே ஏப்ரல், மே மாதங்கள் தான் அங்கேயும் உச்சக்கட்ட கோடை காலம். அங்கேயும் வெயில் அடிக்கிறது; ஆனால், அதில் உக்கிரமில்லை; காற்றில் வறட்சி இல்லை; ரோட்டில் அனல் பறப்பதில்லை. காரணம், மரங்கள்.


மாயமாகும் மழை நீர்: ஊரிலே எங்கே மழை பெய்தாலும், எல்லாத் தண்ணீரும் பஸ் ஸ்டாண்டுக்கு வரவைக்கும் நம்மூர் பொறியாளர்களின் தொழில்நுட்பமெல்லாம், அங்குள்ள இன்ஜினியர்களுக்கு தெரியவில்லை. எவ்வளவு நேரம் மழை கொட்டினாலும், ஒரு சொட்டுத்தண்ணீரைக்கூட ரோட்டில் பார்க்க முடிவதில்லை. சிங்கப்பூரில் ஒரே ஓர் ஆறு தான் ஓடுகிறது. ஆனால், அங்கே தண்ணீர்க் கஷ்டமே இல்லை. ஆண்டு முழுவதும் பெய்யும் மழை நீரை, ஒரு சொட்டு விடாமல் சேகரித்து விடுகின்றனர். அந்த அளவுக்கு துல்லியமாய் அமைக்கப்பட்டிருக்கிறது மழை நீர் வடிகால்.


குப்பைக்கு குட் பை!: குப்பைத் தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தே, கோடீஸ்வரன் ஆன அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கே நிறையப்பேர். அங்கே குப்பைத்தொட்டிகள் அதிகமில்லை. ஏனெனில், குப்பை சேர்ப்பதற்கான வாழ்க்கை முறையே அங்கு இல்லை.பத்து நிமிடத்தில் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட்டு, 10 பாலீதீன் பைகளில் பார்சல் வாங்கிப் போய், உணவோடு நோயையும் சேர்த்து உட்கொண்டு, ஊரையும் நாறடிப்பது நம்மூர் வழக்கம். இன்றைக்கு, இந்தியாவின் எல்லா பெரு நகரங்களையும் மிரட்டிக் கொண்டிருப்பது மட்காத கழிவுகள்தான்.அங்கேயும் பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன; அவை எதுவுமே குப்பை மேடாக மாறுவதில்லை. குப்பைகளில் 56 சதவீதத்தை மறு சுழற்சி செய்து விடுகின்றனர். வரும் 2012க்குள் இதை 60 சதவீதமாகவும், 2020க்குள் 65 சதவீதமாகவும், 2030க்குள் 70 சதவீதமாகவும் மாற்றுவதே அந்நாட்டின் தேசிய மறுசுழற்சித்திட்ட இலக்கு. நம் நாட்டுக்குப்பையில் 10 சதவீதம் மறுசுழற்சிக்குப் போவதும் சந்தேகமே.


கார்களுக்கு கட்டுப்பாடு!: சுத்தமான காற்று, தட்பவெப்பநிலை மாற்றம், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, மக்கள் நலம், இயற்கை பாதுகாப்பு, சர்வதேச தொடர்புகள்... இந்த 7 விஷயங்களை முன்னிறுத்தியே 'சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012' வகுக்கப்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்களுக்கான பங்கு அதிகம். சிங்கப்பூர் வளமையான நாடாக இருந்தாலும், வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றுமோர் சாதனை. அங்கே, தனிநபர்கள் வாகனங்கள் வாங்க மாபெரும் கட்டுப்பாடுகள் உள்ளன. நினைத்ததுபோல, ஒரே வீட்டில் 9 காரை வாங்கி, வீட்டுக்காரிக்கு ஒன்று, வேலைக்காரிக்கு ஒன்று என்று அனுப்ப முடியாது. அங்கே 1990லேயே 'வி.க்யூ.எஸ்' எனப்படும் (வெய்கிள் கோட்டா சிஸ்டம்) நடைமுறைக்கு வந்து விட்டது. வாகனம் வாங்க வேண்டுமெனில், எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.வாகனத் தொகையை விட வரி, நிறுத்துமிடத்துக்கு வாடகை, ரோட்டைப் பயன் படுத்த கட்டணம் என நிறைய 'தாளிப்புகள்' இருப்பதால், சாதாரண ஆட்கள் யாரும் வாகனம் வாங்க முடியாது. அதனால்தான், அங்கே வாகனங்களின் எண்ணிக்கை, இன்று வரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.


ஆனாலும், மக்களைத் திண்டாட வைக்காத வகையில், எம்.ஆர்.டி. (மாஸ் ரேபிட் டிரான்சிட்) என்ற பெயரில், 3 முக்கிய வழித்தடங்களில் இடைவிடாமல் ரயில்களை இயக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு. வடக்கிலிருந்து கிழக்கு, கிழக்கிலிருந்து மேற்கு, சுற்று ரயில் என அத்தனை ரயிலும் ஓடுவது அண்டர்கிரவுண்டில்தான்.இதைத்தவிர்த்து, 'எல்.ஆர்.டி.' எனப்படும் 'லைட் ரயில் டிரான்ஸிட்' எனப்படும் ரயில் போக்குவரத்தும் உள்ளது. அத்துடன், 2 பெரிய நிறுவனங்களிடம் பஸ்களை இயக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், போக்குவரத்து என்பது அங்கே ஒரு பிரச்னையே இல்லை. டிக்கெட் எடுக்காமல், ரயில்வே ஸ்டேஷனின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்குப் போகவே முடியாது. ரயில் டிக்கெட் உட்பட எல்லாவற்றிலுமே 'ஆட்டோமேட்டிக்' முறை தான். பயணத்துக்கு ஒரு டாலர் மட்டுமே; டெபாஸிட் ஒரு டாலர். பயணம் முடியும் இடத்தில், மிஷினில் கார்டைப் போட்டால் ஒரு டாலர் திரும்ப வந்து விடும்.ஹவுசிங் அண்ட் டெவலப்மென்ட் போர்டு எனப்படும் அந்த அமைப்புதான்.


நாடு முழுவதும் பல அடுக்குமாடிகளைக் கட்டி, மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை சொந்தமாக்கித்தருகிறது. ஒரே குடியிருப்பில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ, அந்த அரசு அனுமதிப்பதில்லை.சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள் என எல்லோரையும் சம விகிதத்தில் குடியேற்றி, நாட்டு மக்களிடம் ஒற்றுமையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது அங்குள்ள அரசு காட்டும் அக்கறையும், தேசத்தின் வளர்ச்சியின் மீது மக்கள் காட்டும் ஆர்வமும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே ஓர் உதாரணம்.


சில்லுன்னு ஒரு பயணத்துக்கு...சில்க் ஏர்வேஸ்! சிங்கப்பூருக்கு சில்லென்று உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது சில்க் ஏர்வேஸ். 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் பிராந்திய இயக்கத்துக்கான பிரிவு. இந்தியா, சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உட்பட 11 ஆசிய நாடுகளில் உள்ள 33 நகரங்களுக்கு வாரத்தில் 400 நவீன சொகுசு ரக விமானங்களை இயக்கி வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் மற்றும் கோவை ஆகிய நகரங்களிலிருந்து தற்போது 'சில்க் ஏர்வேஸ்' விமானம், சிங்கப்பூருக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. வரும் மே 17லிருந்து பெங்களூருவிலிருந்தும், ஜூன் 14லிருந்து சென்னையிலிருந்தும் விமான சேவையை துவக்கவுள்ளது.கோவையிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிங்கப்பூருக்கும், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கும் விமானங்களை 'சில்க் ஏர்வேஸ்' (தொடர்புக்கு:0422-4370271, 4370281) இயக்கி வருகிறது. உணவு, உபசரிப்பு, இருக்கை வசதி என பல வகைகளிலும் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருவதால், உலகின் 'டாப் 10' வரிசையில் கடந்த 2005லிருந்து 2009 வரையிலும் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறது. அதிலும், 'பெஸ்ட் கேபின் சர்வீஸ்' என்பதிலும் உலகில் முதல் 10 இடங்களுக்குள் பெயரைத்தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.


ரெசார்ட்ஸ் வேர்ல்டு, ஸென்டோசா: சிங்கப்பூரின் ஸென்டோசா தீவிலுள்ள 'ரிசார்ட்ஸ் வேல்டு'தான் சிங்கப்பூரின் புதிய வசீகரம்; 121 ஏக்கரில் செதுக்கப்பட்ட வர்ணஜால உலகம். காட்டுக்குள்ளே, தண்ணீருக்குள்ளே, கடற்கரையோரம் போன்ற நீச்சல் குளத்துக்கு அருகே...என 5 ஸ்டார் ஓட்டல்கள் 6 அமைத்திருக்கின்றனர். அதன் அமைவிடங்களில் வித்தியாசம் என்றால், அதன் அறைகளுக்குள் இருக்கும் உள் அலங்காரம், அட்டகாசம். அவற்றிலுள்ள அறைகளின் எண்ணிக்கை மட்டும் 1,800.


விடிய விடிய ஆட்டம்: 'ரெஸார்ட்ஸ் வேல்டு'க்குள்தான் சிங்கப்பூரின் முதல் 'கேஸினோ' (சூதாட்ட விடுதி) உள்ளது. இரவு, பகலென 24 மணி நேரமும் குளுகுளுவென பாதாளத்தில் இயங்கும் அதிசய உலகம். வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் பாஸ்போர்ட் காண்பித்தால் அனுமதி இலவசம். சிங்கப்பூர்வாசிகளுக்கு 100 டாலர் (ஒரு சிங்கப்பூர் டாலர்=33 ரூபாய்) நுழைவுக் கட்டணம். அவர்கள் அடிக்கடி வருவதைத் தடுப்பதற்கு அரசு செய்யும் யுக்தி.இலவசங்களை முன் வாசலில் கொடுத்து, 'சரக்கு' விற்பனை மூலமாக, கொல்லைப் புறத்தில் குடும்ப வருவாயைப் பறிக்கும் நம் அரசுகளின் சாதுர்யமும், அந்த நாட்டு மக்கள் நலன் மீது சிங்கப்பூர் அரசு காட்டும் அக்கறையும் சம்மந்தமே இல்லாமல் நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. என்னதான் நான் சிங்கப்பூர்ல இருந்தாலும், நான்பிறந்து ஓடி திரிந்த ஊரை மறக்க முடிய வில்லை...

For more info www.maran.co.nr


அன்புடன்

உங்கள்

மாறன்....



May 10, 2010

கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

வீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகி விட்ட நிலையில் ஒரு
கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது.இதில்
ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசிய தேவையாக இருக்கும்.அவரே அதில் உள்ள
செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கி வருவார்.மற்றவர்கள்
தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள்.இதில் பிரச்சனை
என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும்
சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்தி விடுவார்கள்.இது கம்ப்யூட்டரிலேயே
தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும்
நிலையை தோற்றுவிக்கும்.

எடுத்துக்காட்டாக வேர்டில் ரூலர்,நார்மல் டெம்ப்ளேட்,எக்ஸெல் தொகுப்பில் தேதி
அமைப்பு,பக்க அமைப்பு,பிரவுசர் செட்டிங்ஸ் ,இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை
குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள்
இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகி விடும்.எனவே மற்றவர்கள்
கம்ப்யூட்டரில் செட்டிங்ஸை மாற்றுவதைத் தடை செய்திட வேண்டும் என
எண்ணுவார்கள்.

குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்து பயன்படுத்துகையில் இது போன்று சூழ்நிலைகள்
அடிக்கடி ஏற்படும்.தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து
வைப்பதும்,இண்டர்நெட்டில் செட்டிங்ஸை மாற்றி பயன்படுத்துவதும் குழந்தைகள்
அடிக்கடி செய்யும் தவறுகளாகும்.

இது போன்ற பிரச்னைகளில் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாக்கவும் அதன் மூலம் உங்களின் நலனைப் பாதுகாக்கவும் விண்டோஸ் Steadystate என்று ஒரு புரோகிராமினை இலவசமாகத் தருகிறது.இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால் உங்களைத் தவிர யாரும் செட்டிங்ஸ் மாற்ற
முடியாது.இதை எப்படி அமைப்பது என பார்க்கலாம்.

1.இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட்(Windows Steady State) .இது கிடைக்கும்
தள முகவரி :www.microsoft.com/windows/products/winfamily/sharedaccess இந்த தளம் சென்று
புரோகிராமினை இறக்குவதற்குள் உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்ய வேண்டும்.அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள்.இதற்கு Start->>All programs->>Accessories->>System Tools->>Disk Defrag menter எனச் செல்லவும்.அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின்
டிபிராக்மெண்ட் பட்டனை அழுத்தவும்.இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும்.முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் சென்று அண்மைக் காலத்தில்
மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும்.பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்
தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும்.அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின்
அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.இதனை Control Panel->>User Accounts சென்று ஆப்ஷனில் உறுதி செய்யலாம்.

2.இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியது
தான்.மேலே குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் தளம் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும்.முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி காசு கொடுத்து வாங்கிய
ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள்ளப்படும்.இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.இதை டெஸ்க்டாப்பில் சேவ்
செய்திடவும்.பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற
பைலை டபுள் கிளிக் செய்திடவும்.டயலாக் பாக்ஸ்களுக்கு எஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை
அழுத்தியவாறு தொடர்ந்தால் புரோகிராம் பதியப்பட்டு விடும்.

3.அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும்.ஸ்டார்ட்-ஆல் புரோகிராம்ஸ் சென்று
இயக்கலாம்.அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து
இயக்கலாம்.இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு
திறக்கப்படும்.இதனை மூடவும்.திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள
மற்ற யூசர் அக்கவுண்ட்ஸ் அனைத்தும் காட்டப்படும்.அட்மினிஸ்ட்ரேட்டர்
அக்கவுண்ட் காட்டப்பட மாட்டாது .உங்களுக்குத் தேவையான பிற யூசர்
அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட்களை
உருவாக்கலாம்.இதற்கு "Add a New User" என்ற லிங்க்கில் கிளிக் செய்து பெயர் மற்றும்
பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.

4.இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன அக்கவுண்டிற்கு
நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம்.இதில் ஒரு யூசர் எவ்வளவு
நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் செய்திட முடியும்.

5.அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும்.இதன் மூலம் கம்ப்யூட்டரைப்
பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப்
பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம்.இதில் High,Medium,Low மற்றும் No Restrictions
என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன.நீங்கள் அமைக்க விரும்பும்
வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.இங்கு காணப்படும் பட்டியலில் விண்டோஸ்
வசதிகள் அனைத்தும் காணப்படும்.ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல்
பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.

6.இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான
தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம்.ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல்
தடுத்தல்,சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும்
டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும்.இறுதியில்
அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இணைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும்
பட்டியலிடப்படும்.இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க்
மறைக்கப்பட்டுவிடும்.

7.அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம்.இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும்
மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம்.இன்டர்நெட்
பயன்பாட்டினையே தடை செய்யலாம்.அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும்
செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.

8.எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்த வரை விசுவல் பேசிக் புரோகிராமினை செயல்
இழக்கச் செய்து விட்டால் இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்து விடலாம்.
அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள்
ஏற்கனவே இருக்கின்ற ஆட்-இன் வசதிகளை நீக்க முடியாது.புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.

9.அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம்.இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள்
கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல்
கிடைக்கும்.தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம்களுக்கு எதிரே டிக் செய்தால்
அவை வலது புறம் மாறிவிடும்.அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட
வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம்.இன்ஸ்டால் செய்யப்பட்ட
புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து
தடுத்து விடலாம்.

10.பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்து விட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து
கொள்ளலாம்.பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட
வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடைகளுக்கான செட்டிங்ஸ்
ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில்
அமைத்துவிடலாம்.இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User
என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த
போல்டர் செல்ல வேண்டும்.பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூஸருக்கான தடைகளோ
அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.அதன்பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும்.இப்படியே
ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.

11.தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும்
பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம்.இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள "Global Computer Settings"பயன்படுத்த வேண்டும்.அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கை கிளிக் செய்திட வேண்டும்.விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறக்கலாம்.
இதற்கு 'Turn on the Welcome Screen' என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடலாம்.

12.பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப்
பயன்படுத்துவதை தடை செய்திடும் வகையில் அமைக்கப்படுகின்றன.ஒரு சில
குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன.எம்.எஸ்.ஆபீஸ்
டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாத படி தடை
அமைதிருப்போம்.ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் திறக்க
முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும்.எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது.இதற்கென
'Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer' என்று ஒரு
ஆப்ஷன் உள்ளது.இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு
முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.

13.அப்டேட் பைல்கள் விண்டோஸ் சிஸ்டம் இயங்க மிக மிக முக்கியமானவையாகும்.இவற்றை
அவ்வப்போது தானாக சிஸ்டம் அப்டேட் செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும்.
இந்த வசதியினையும் ஸ்டெடி ஸ்டேட் தருகிறது.இதனுடைய மெயின் பேஜில்
Schedule Software Update என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.பின் அதில்
'Use Windows Steadystate to automatically download and instal updates' என்று
இருப்பதில் கிளிக் செய்து இயக்கவும்.அங்கேயே இருக்கும் மெனுவில் எத்தனை
நாட்களுக்கு ஒருமுறை விண்டோஸ் இந்த அப்டேட் பைல்களை செக் செய்து அப்டேட்
செய்திட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம்.இதே போல அப்டேட்
தேவைப்படும் மற்ற செக்யுரிட்டி புரோகிராம்களுக்கும்,ஆண்டி வைரஸ் போல,இதே
போல் நாட்களை செட் செய்திடலாம்.

14.விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமில் மிக மிக முக்கியமானது டிஸ்க் பாதுகாப்புதான்.மெயின் ஸ்க்ரீனில் உள்ள 'Protect the Hard Disk' என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.
ஆனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும்.முழுமையாக ஒரு டிஸ்க்கை பாதுகாக்க அமைத்துவிட்டால் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் எதுவும் சேவ் செய்திட முடியாது.எனவே
அதற்கான வழிகளை நன்கு யோசித்த பின்னரே இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்க
வேண்டும்.

நம் கம்ப்யூட்டரை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற மைக்ரோசாப்ட் தரும் அருமையான
புரோகிராம் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் .இலவசமாக கிடைக்கும் இந்த புரோகிராமினை
நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது நல்லது.மேலே சொல்லப்பட்டிருப்பது
மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு வழிகளையும் இந்த புரோகிராம் தருகிறது.

Read more: http://www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்....

கருத்து சொன்னவர்கள் (Recently):